2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பணப்பையை திருடிய, பெண் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 23 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்,மு.இராமச்சந்திரன் 

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இறை வழிபாட்டை மேற்கொள்ள வந்த பெண்ணின் பணப்பையை திருடிய, பெண்ணொருவரை, ஹட்டன் பொலிஸார், நேற்று மாலை 6 மணியளவில் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த, 46 வயதான பெண்னே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்,  பணப்பையில் இருந்த தன்னியக்க இயந்திர (ஏ.டி.எம்) அட்டையை எடுத்து பொருட்களை கொள்வனவு செய்ததுடன், பணத்தையும் எடுத்துள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அப்பெண், அந்த அட்டையை (காட்) பயன்படுத்தி, 30 ஆயிரத்து 790 ரூபாய்க்கு, ஆடைகள் மற்றும் தேவையான பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளார்.

ஆடைகளை கொள்வனவு செய்யும்போது, சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியிருந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டே, சந்தேகநபரான அப்பெண்ணை கைதுசெய்துள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .