2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

போதைப்பொருளுடன் ​​ஐவர் கைது

Janu   / 2024 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை நகரில் வைத்து    4700 மில்லிகிராம்  ஹெரோயின்  மற்றும்   260 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன்  5 சந்தேக நபர்கள்  புதன்கிழமை (7) கைது செய்யப்பட்டதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த  25 மற்றும் 30 வயதுடையவர்களாவர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட  ஒருவரின் கையடக்க தொலைபேசி தரவுகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த ​​ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ​பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X