2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மலசல கூடங்களால் மக்கள் அவதி

Editorial   / 2020 மே 24 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துவாரக்ஷான்

தலவாக்கலை நகரசபை பொறுப்பின் கீழுலுள்ள பொது விளையாட்டு மைதானத்தில், கடந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது, நகரசபையால் ஏற்படு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வுகளுக்காக, தற்காலிகமாக நகரசபையால் அமைக்கப்பட்ட மலசலக்கூடங்களில், அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானத்திலேயே, மலசலக்ககூட குழியும் வெட்டப்பட்டுள்ளதாகவும் எனினும் இதை அகற்றுவதற்கு, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த மலசலக்கூடம் அகற்றப்படாமையால், நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளது என்றும் மைதானத்துக்கு விளையாட வருபவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .