2025 மே 08, வியாழக்கிழமை

ஹட்டனில் ஒருவருக்கு தொற்று; பல்பொருள் அங்காடி, வர்த்தக நிலையத்துக்குப் பூட்டு

Kogilavani   / 2020 நவம்பர் 05 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் தும்புறுகிரிய பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, ஹட்டன் நகரிலுள்ள பல்பொருள் அங்காடி மற்றும் வர்த்தக நிலையமொன்று, தற்காலிக மூடப்பட்டுள்ளதுடன், மேற்படி பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்களாக 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி பெண்ணின் கணவர் சென்று வந்தததாகக் கூறப்படும் பல்பொருள் அங்காடி, வரத்தக நிலையம் என்பனவே, கிருமிதொற்று நீக்கம் செய்யப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

அத்துடன், மேற்படி பெண்ணின் கணவர், ஹட்டனில் கடந்தவாரம் இடம்பெற்ற மரணவீடொன்றுக்குச் சென்று வந்ததாகவும், குறித்த மரணவீட்டுக்குச் சென்றவர்களை அவதானமாக இருக்குமாறு பொதுசுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X