2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

1,50,000 பீடிகள் பறிமுதல்

S. Shivany   / 2020 ஒக்டோபர் 15 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

ஹெரணை பகுதியில், முறையான அனுமதிப்பத்திரம் இன்றி   தயாரிக்கப்பட்ட  ஒரு தொகை பீடிகளை  கைப்பற்றி, அதனை அழித்துள்ளதாக, கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹொரணை கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கனன்வில- ஹொரகஸ் சந்தி பகுதியில் மேற்கொண்ட  சுற்றிவளைப்பின்போது,  1,50,000 பீடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

இதன்போது பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 50 வயதுடைய நபரை கைதுசெய்து,  கலால் திணைக்கள உதவி ஆணையாளர் முன்னிலையில்  ஆஜர்படுத்தியதையடுத்து,  அவருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .