2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

60 இலட்சம் ரூபாய் மோசடி ; பெண் கைது

Janu   / 2024 மார்ச் 21 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞன்  ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக  கூறி,  60 இலட்சம் ரூபாய் பணத்தினை  மோசடி செய்த குற்றச்சாட்டில் ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் யாழ்ப்பாண பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த  பெண்  யாழ்ப்பாணத்தை சேர்ந்த  இளைஞன்  ஒருவனை  கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக , கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கூறி 60 இலட்சம்  ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளதுடன்  மூன்று மாதங்களாக இளைஞனின் பயண ஏற்பாடுகள் நடைபெறாததால் , இது  தொடர்பில்  இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் .

அதற்கமைய  விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ,  குறித்த  பெண்ணை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய  போது   தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள  கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்சம்  ரூபாய் பணத்தினை இளைஞனிடம்   மீள் அளித்துள்ளார் .

அதனையடுத்து பெண்ணை 06 இலட்சம்  ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல  நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது .

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X