Mayu / 2024 மே 06 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரனுக்கு (ஈழவேந்தன்) அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (05) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணேந்திரனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் .


9 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Apr 2026