2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தனுஷ்கோடியில் வயோதிப தம்பதி மயங்கிய நிலையில் மீட்பு

Freelancer   / 2022 ஜூன் 27 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் சென்று உள்ளனர்.

இந்த நிலையில் திருகோணமலை பகுதியில் இருந்து  படகு மூலம் வயதான தம்பதியர் 2 பேர் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர். 

இவர்கள் இருவரும் மயக்கமுற்ற நிலையில் கடற்கரையில் சுருண்டு விழுந்து கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மயக்க நிலையில் இருந்த அவர்களை மீட்டு அம்பியூலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X