2024 மே 20, திங்கட்கிழமை

மரத்திலிருந்து தவறி விழுந்தவர் மரணம்

Janu   / 2024 மே 08 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் புத்தூரில் உள்ள ஆலய சூழலில், மரம் வெட்டிக் கொண்டு இருந்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (07)  இடம்பெற்றுள்ளது .

திருநெல்வேலி, கலாசாலை வீதியை சேர்ந்த ஓய்வுபெற்ற பல்கலைக்கழக உத்தியோகத்தரான 61 வயதுடைய முத்து சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரை , காயமடைந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது .

அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை  அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X