2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுலாப் பயணிகளின் வருகை மார்ச் மாதத்தில் 7.7 வீதத்தால் அதிகரிப்பு

A.P.Mathan   / 2013 மே 07 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7.7 வீதத்தால் அதிகரித்து 98,155 ஆக பதிவாகியிருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டின் முதல் இரு மாத காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 10.9 வீதத்தால் அதிகரித்து 288,798 ஆக பதிவாகியிருந்தது. இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பெருமளவு வீழ்ச்சி காணப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பாவிலிருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 44,008 ஆக பதிவாகியிருந்தது. இது 10.5 வீத அதிகரிப்பாகும். தெற்காசிய நாடுகளிலிருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 19,261ஆக பதிவாகியிருந்தது. இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18.1 வீதம் வீழ்ச்சியடைந்து 11,789ஆக அமைந்திருந்தது. இதற்கு பிரதான காரணமாக இலங்கைக்கான சுற்றுலா வீசா முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டமை அமைந்துள்ளதாகவும், தமிழகத்திலிருந்து இலங்கைக்கு எதிராக பல எதிர்ப்பு கருத்துகள் முன்மொழியப்படுவதும் அமைந்துள்ளன. இதேபோன்று மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் 3.6 வீதத்தால் வீழ்ச்சியடைந்து 3,796 ஆக பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .