2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

அசர்பைஜான் நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி குறித்து ஜனாதிபதி கோரிக்கை

A.P.Mathan   / 2013 மே 08 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசர்பைஜான் நாட்டிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பான கோரிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்த அசர்பைஜான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எல்மார் மம்மடியாரொவ் உடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி இந்த கோரிக்கையை மேற்கொண்டிருந்தார்.
 
ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார தடை காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்நோக்கி வரும் சவால்கள் மற்றும் இதன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள விலக்கழிப்புகள் போதுமானதாக இல்லையெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த விடயங்களை கேட்டறிந்த அசர்பைஜான் வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் கோரிக்கைக்கு தாம் சாதகமான பதிலை வழங்கக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்திருந்தார். அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
 
இலங்கை சாதாரணமாக வருடமொன்றுக்கு 5பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .