2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை தேயிலையை உள்நாட்டில் பிரபல்யப்படுத்துவதற்கான பிரசார நடவடிக்கை

A.P.Mathan   / 2013 மே 14 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேயிலையை உள்நாட்டில் பிரபல்யப்படுத்தும் நோக்கில், வெவ்வேறு பிரதேசங்களில் தேயிலை இல்லங்களை நிறுவ இலங்கை தேயிலை சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
 
இதற்கமைய முதலாவது தேயிலை இல்லம், கொழும்பு 7 பகுதியிலுள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமையவுள்ளது. மேலும் இரு இல்லங்கள் முறையே நுவரெலியா மற்றும் காலி ஆகிய நகரங்களில் நிறுவப்படவுள்ளதாக தேயிலை சபையின் பிரசார நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ஹசித டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
 
இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கை தேயிலையை உள்நாட்டவர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்த திட்டமிட்டுள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் பிரபல்யப்படுத்தும் வகையில் இலங்கை தேயிலை சபையின் சந்தைப்படுத்தல் கொள்கைகளுக்கு அமைய முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த இல்லங்களின் உரிமையாண்மையை இலங்கை தேயிலை சபை தன்னகத்தே கொண்டிருக்கும் அதேவேளை, இவற்றை நிர்வாகிக்கும் பொறுப்பை பிரிதொரு நிறுவனத்துக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .