2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மக்கள் செறிவான பகுதிகளுக்கு ஆடை தொழிற்சாலைகளை மாற்ற நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை

A.P.Mathan   / 2013 மே 27 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஆடைத் தொழிற்துறையை சேர்ந்த தொழிற்சாலைகள் பெரும்பாலானவை சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ளன. இந்த பகுதிகளுக்கு வருகை தரும் ஊழியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படவே, மக்கள் செறிவான பகுதிகளுக்கு தமது தொழிற்சாலைகளை மாற்றி அமைப்பதற்கான அனுமதியை ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளன.
 
கொழும்புக்கு வெளியே காணப்படும் கிராமியப் பகுதிகளில் இந்த தொழிற்சாலைகளை நிறுவுவதன் மூலம், கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடிவதுடன், தொழிற்சாலைகளின் செயற்பாடுகளையும் நிலையானதாக பேணுவதற்கு முடியுமெனவும் ஜாஃவ் அமைப்பின் பதில் தலைவர் சன்ன பலன்சூரிய தெரிவித்துள்ளார்.
 
தமது பெருமளவு தொழிற்சாலைகளை மொனராகலை, பதுளை போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது இந்த தொழிற்துறையில் தொழிலாளர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இதற்கு பிரதான காரணம், ஊழியர்கள் தமது சொந்த இடங்களில் வசிக்கவே அதிகளவு ஆர்வம் கொண்டுள்ளதால், சுதந்திர வர்த்தக வலயங்களில் பணியாற்ற ஆர்வம் காண்பிப்பது குறைவடைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே இந்த தொழிற்சாலைகளை மாற்றியமைப்பதற்கான யோசனையை அரசாங்கத்திடம் தாம் முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .