2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கொழும்பு பங்குச்சந்தை சரிவு

A.P.Mathan   / 2013 மே 29 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஒருவார காலப்பகுதியில் பதிவு செய்திருந்த ஆகக்குறைந்த பெறுமதியை நேற்றைய (28) கொடுக்கல் வாங்கல்களின்போது கொழும்பு பங்குச்சந்தை பதிவு செய்திருந்தது. முதலீட்டாளர்கள் வங்கிகளின் பங்குகள் மீது மேற்கொண்டிருந்த முதலீடுகளை விற்று இலாபமீட்டியதன் விளைவாக இந்த சரிவு ஏற்பட்டிருந்ததாகவும், ஆகக்குறைந்த எண்ணிக்கையிலான பங்கு கொடுக்கல் வாங்கல்களின் மூலமாக இந்த சந்தை பெறுமதிகள் பதிவாவதாகவும் சந்தை முகவர்கள் தெரிவித்திருந்தனர்.
 
மே மாதம் 17ஆம் திகதிக்கு பின்னர், பதிவான ஆகக்குறைந்த பெறுமதியான நேற்றைய கொடுக்கல் - வாங்கல் சுட்டெண் பெறுமதி அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 6434.70 ஆகவும் பதிவாகியிருந்தது. 
 
சந்தையின் கொடுக்கல் - வாங்கல்களை ஆக்கிரமித்திருந்த கொமர்ஷல் வங்கியின் பங்குகளின் பெறுமதி 0.8 வீதத்தால் சரிவடைந்திருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 74.7 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்திருந்ததாகவும், சந்தையின் மொத்த புரள்வு பெறுமதி 553.2 மில்லியன் ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
 
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சரிவடைந்து 126.48/55 எனும் பெறுமதியில் பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .