2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

A.P.Mathan   / 2013 மே 23 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த வீதிகளை புனருத்தாரணம் செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சீனாவிடமிருந்து 580 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், உலக வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் கடனாக பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசுக்கு, அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
 
இதற்கமைவாக, இந்த கடன் தொகையை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கை வெகுவிரைவில் சீனாவுடன் கைச்சாத்திடப்படும் எனவும், இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடன் தொகையின் மூலம் ஊவா மாகாணத்தை சேர்ந்த ஹுலந்துவ – கஹாம்பன வீதி, கொழும்பு – காலி – ஹம்பாந்தோட்டை – வெல்லவாய வீதி, பேலியகொட – புத்தளம் வீதி போன்றன புனருத்தாரணம் செய்யப்படவுள்ளன. 
 
இந்த நடவடிக்கைகள் நான்கு பிரிவுகளில் இடம்பெறவுள்ளதுடன், இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பு Maga என்ஜினியரிங், Hovael கோர்ப்பரேஷன் மற்றும் CML – MTD கொன்ஸ்ட்ரக்ஷன், அக்சஸ் என்ஜினியரிங், துடாவே பிரதர்ஸ் போன்றன இணைந்து முன்னெடுக்கவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .