Freelancer / 2022 நவம்பர் 07 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் முன்னெடுக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த கடன் உதவி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தாமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவின் அடுத்த சந்திப்பு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ளமை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
அதுவரையான காலப்பகுதியினுள் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்திருக்க வேண்டும் என்பதுடன், அதன் முன்னேற்றத்தை இந்த சந்திப்பில் அறிவித்து, அனுமதியைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இடம்பெறாவிடின், இந்த உதவித் தொகையைப் பெறுவதில் மேலும் கால தாமதம் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025