2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பளையில் மின்னல் தாக்கம்

Princiya Dixci   / 2022 மார்ச் 24 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராலை பகுதி வீடொன்றை, நேற்று (23) மாலை மின்னல் தாக்கியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த வேளை, வீட்டில் இருந்த அனைவரும் வீட்டின் முன் ஹோலில் இருந்துள்ளனர்.

இதன்போது பாரிய சத்தத்துடன் மின்னல்  வீட்டின் கூரைப் பகுதியிலேயே தாக்கியுள்ளது.

இதனையடுத்து மின் குமிழ்கள் வெடித்துச் சிதறியுள்ளது. மின்விசிறியும் தரையில் விழுந்துள்ளது. மேலும், மின்சாரமும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் தெய்வாதீனமாக வீட்டில் இருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .