2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பூசகரின் பணப்பை பறிப்பு

Freelancer   / 2022 மே 07 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வினோத்

மீசாலை - தட்டான்குளம் பிள்ளையார் ஆலயத்தின்  பூசகரின் பணப் பையை  இளைஞர்கள் இருவர் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

குறித்த பூசகருக்கு கிடைக்கும் நாளாந்த வருமானமும் மாத வேதனமுமாக 25 ஆயிரத்தையும் தனது பையில் வைத்துக்கொண்டு மீசாலை பிள்ளையார் ஆலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஆலயத் திறப்பை எடுத்த வேளை, ஓர் இளைஞர் கைப் பையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளார்.

இது தொடர்பில் பூசகரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X