A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு “மனைவிகளை” கொலைசெய்த ஆண் அன்னப் பறவையொன்று தனிமையான வாழ்க்கையை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. வக்கிர புத்தியுடன் தனது துணைகளை துரத்தித்துரத்தி வல்புறுத்தி கொலைசெய்யும் இந்த அன்னத்தின் இச்செயலை கட்டுப்படுத்த ஊழியர்கள் அரும்பாடுபடுகின்றனர்.
பிரிட்டனின் சமர்செட் பிராந்தியத்திலுள்ள பூங்காவனத்தின் ஊழியர் இந்த அன்னத்திற்கு மற்றுமொரு துணையினை தேடும் முயற்சியை கைவிட்டுள்ளனராம்.
அந்த அன்னமானது தனது முதல் மனைவியை கொன்றுவிட்டதாக நம்பப்படுகிறது. குறித்த பெண் அன்னப்பறவை மர்மமான முறையில் இறந்துகிடந்தது.
இரண்டாவது மனைவியாக வந்த அன்னமானது மூன்று அன்னக் குஞ்சுகளைப் பெற்றது. ஆனால் தனது ஜோடியின் வன்முறைக் குணம் காரணமாக குஞ்சுகளுடன் அங்கிருந்து வெளியேறிவிட்டது.
தனது மூன்றாவது மனைவியை அன்னம் தடாகத்திற்கு வெளியே துரத்தியதால் அப்பெண் அன்னம் பின்னர் இறந்துவிட்டது.
பூங்காவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிலிப் வைட் இது தொடர்பாக கூறுகையில்... அந்த அன்னம் மூன்று துணைகளை வைத்திருந்தது. ஆனால் அவ்வுறவுகள் நீடிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
maagi Thursday, 26 September 2013 10:43 AM
அட பாவி இதுக்கு எதுக்கு டா கருத்து.. வேற வேல இல்ல?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago