Editorial / 2018 மார்ச் 29 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை, ஹாலிஎல பிரதேசத்தில், பிளேட் வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர், பதுளை வைத்தியசாலையில், நேற்று (28) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளாரென, ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
மொஹொமட் கரீம் ஹசின் என்பவரே, இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை இனந்தெரியாத நபர்கள் இருவரே, பிளேடால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனரென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபரின் வயிறு மற்றும் கால்களில் பிளேடால் வெட்டப்பட்டக் காயங்கள் காணப்படுகின்றனவென, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025