Niroshini / 2021 நவம்பர் 11 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திடீர் சுகயீனம் காரணமாக, கடந்த 8ஆம் திகதியன்று, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொள்ள சென்ற போது, அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவுகளின் அடிப்படையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதோடு, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago