2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

காரணமின்றி எதுவும் படைக்கப்படுவதில்லை

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனிதர் எக்காரியங்களைச் செய்தாலும், அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். அரைகுறைப் பணி அநாவசியமான பிரச்சினைகளை உண்டுபண்ணும்.  

நாகபாம்பு கொல்லப்பட்டால் அதனை ஏன் எரித்துப் புதைக்க வேண்டும்? பாம்பின் விஷம் தோய்ந்த பற்கள் கடினமானவை. அவைகள் நிலத்தில் நீண்ட காலம் இருந்தால், அது படிகமாக இறுகிப் போய்விடும். மேலும், இது கண்களுக்கும் புலப்படாது. 

இதனை எதிர்பாராமல் காலால் மிதித்தால் வரும் வினை கொடியது. பற்கள் இறுகிப்போன படிகத்திலுள்ள கொடிய விஷம் உடலில் ஏறினால், மரணம் சம்பவிக்கலாம். இதே பாம்புகளின் விஷம்தான், மாரடைப்பு, புற்றுநோய், எயிட்ஸ் போன்ற உயிர் குடிக்கும் கொடிய நோய்களுக்கும் மருந்தாகின்றது. காரணமின்றி எதுவும் படைக்கப்படுவதில்லை.  

வாழ்வியல் தரிசனம் 04/10/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .