2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கடந்தகால அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால அனர்த்தங்களில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்கும் அனர்த்தங்களின்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்குகின்றவர்;களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்காக கிராம மட்ட அமைப்புகளுக்கும் உபகரணங்கள் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால வெள்ளம் மற்றும் யுத்த அனர்த்தங்களினால்; பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொள்வதற்கான தகரங்கள் வழங்கப்பட்ட அதேவேளை, 34 கிராம மட்ட அமைப்புக்களுக்கு சமையல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மஹிந்த சிந்தனையின் கீழ் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிடம், மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில்  பிரதி அமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அனர்த்த முகாமைத்துவ நிலையப் பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், பிரதேச செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .