2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

புதிய 10 ரூபா நாணயக்குற்றி அறிமுகப்படுத்தப்படும்: மத்திய வங்கி

A.P.Mathan   / 2013 ஜனவரி 04 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் 25 மாவட்டங்களையும் பிரதிபலிக்கும்வகையில் புதிய 10 ரூபா நாணயக்குற்றி அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்காக பாவனையிலுள்ள பழைய நாணயங்களை மீளப்பெற்று புதிய நாணயங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கையை இலங்கை மத்திய வங்கி முன்னெடுக்கவுள்ளது.

அத்துடன் நாட்டில் பாவனையிலுள்ள நாணயத்தாள்கள் உயர் தரத்தில் காணப்படுவதையும், அதன்; மூலம் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் மத்தியில் சிறந்த அபிப்பிராயததை பெற்றுக்கொள்ள வழிகோலும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேலும் நாணயத்தாள்கள் மற்றும் குற்றிகளின் பயன்பாடு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாடு பூராகவும் முன்னெடுக்க மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .