2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இரத்ததான முகாம்

Kogilavani   / 2018 ஜனவரி 23 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜா   

தலவாக்கலை தமிழ் வித்தியாலய மண்டபத்தில், எதிர்வரும் 25ஆம் திகதி காலை 9 மணிக்கு, இரத்ததான நிகழ்வு இடம்பெறவுள்ளது.  

நுவரெலியா டீ.பீல்ட் சிறுவர் அபிவிருத்திச் சம்மேளனத்தின் அனுசரணையுடன், எழு தோழா இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான நிகழ்வில், அனைவரையும் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   

பெருந்தோட்டப் பகுதியிலுள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கிப் பிரிவில் நிலவும் குருதிப் பற்றாக்குறையை நீக்கும் வகையிலேயே, இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஏற்பாட்டாளர் கே.நிதர்ஷன் தெரிவித்தார்.

மேலதிக விவரங்களுக்கு என்ற 0771054244 அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு, ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .