2025 ஜூன் 23, திங்கட்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில்

Editorial   / 2018 மார்ச் 25 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.மலர்வேந்தன்

குளவி கொட்டுக்கு இலக்கான 10 பெண் தொழிலாளர்கள், பசறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (24) மாலை, பசறை கோணக்கலைத் தோட்ட, ரேந்தபல பிரிவில், கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோதே, தேயிலைச் செடி நடுவே காணப்பட்ட குளவிக்கூடு களைந்து, தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது.

குளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அண்மைக்காலமகவே, பல தொழிலாளர்கள், அடிக்கடி குளவிக்கொட்டுக்கு இலக்காகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .