மு.இராமச்சந்திரன் / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறையிலிருந்த கனவனுக்கு கஞ்சா போதைப்பொருளை, கொண்டு சென்ற மனைவியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவரது வீட்டிலிருந்து வெடி குண்டுகள் மற்றும் ஒருதொகை கஞ்சாவையும் மீட்டுள்ளனர்.
காணி விவகாரம் தொடர்பில் , அட்டன் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த தனது கனவனுக்கு கொண்டுசென்ற மாற்று உடைகளுக்குள், கஞ்சாவை மறைத்து வைத்துச் கொண்டுச் சென்ற பெண்ணே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனவருக்கென கொண்டுவரப்பட்ட ஆடையை சோதனையிட்ட பொலிஸார், மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாலை மீட்டுள்ளனளர். குறித்த பெண் தொடர்பில் சந்தேகம் வலுப்பெறவே மோப்ப நாயின் உதவியுடன் அவரது வீட்டை சோதனையிட்ட பொலிஸார், மிருக வேட்டையாட பயன்படுத்தும் கைக்குண்டுகள் மூன்று மற்றும் 35.60மில்லி கிராம் கஞ்சாவும் மீட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த ஹட்டன் பொலிஸார் அவரை மாவட்ட நீதின்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025