Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 மார்ச் 29 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
லக்ஷபான ஹங்ராம்பிட்டியவிலிருந்து, பயணிகளை ஏற்றிவந்த இ.பொ.ச பஸ் வண்டியின் பின் சில்லில் சிக்குண்டு காயமடைந்த பெண் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கினிகத்தேனை பஸ் நிலைய வளாகத்தில், பொது சந்தைக்கருகிலேயே, இன்று (29) பகல் 2.15 மணியளவில், இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான பெண், கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, மேற்படி பஸ் தரிப்பிட வளாகத்தில் வெள்ளிக்கிழமை தோறும், பொது சந்தை நடத்தி வருகின்ற நிலையில், குறித்த பொது சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுமாறு, இலங்கை போக்குவரத்து பஸ் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களும், கினிகத்தேனை அம்பகமுவ பிரதேச சபைக்கு அறிவித்துள்ள போதிலும், இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
24 minute ago